தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Wednesday, December 28, 2011

yamma yamma HIT Song -2011


Monday, November 28, 2011

prabha-Win light music

Tuesday, November 22, 2011

உன் பாதத்தை

கடற்கரைக்கு 
நீ
வரும்போதெல்லாம்
நான்
அலையாக
மாறி விடுகிறேன் ...
உன் பாதத்தை
முத்தமிட ...

பே . மாரிசங்கர்
அம்பாசமுத்திரம்

பறக்கிறேன்

நானும்
விண்ணில் பறக்கிறேன் !
என்னவளின்,
ஏவுகனை   பார்வை
தாக்கியதால் !

தன்ராஜ்
பெரிய ஒபுளாபுறம் 

Friday, October 28, 2011

பேச எண்ணிய என் உதடு

என்னென்னவோ  
பேச எண்ணிய 
என் உதடு 
உன்னைக்  கண்டதும் 
மவுனமானது !
ஆனால்
மவுனமாய் இருந்த 
என் விழிகள் 
உன்னிடம் 
பேச ஆரம்பித்தது !

 எம் . தனசுதா 
 சீர்காட்சி   

Tuesday, October 11, 2011

வானவில்

அதிகாலை
வானவில்
என்னவளின்
மார்கழிக்கோலம்  !

ஏ. எம் .  செரீப்
                 புதுக்கோட்டை 

நீ வேண்டும்

எனக்கு ஊரும் வேண்டாம்
உறவும் வேண்டாம்
நீ வேண்டும்
பொத்திப்பொத்தி
வைத்தும்
உடைந்து  வழிகிறது
கண்ணீர் !

உலை  கொதிப்பது   போல்
தினமும்
உள்ளம் கொதித்து
குலைகிறது !

நீ தூண்டி விட்டுப்  போன 
விளக்கு
இன்று
எண்ணை இல்லாமலே
உடலை எரிக்கிறது !

அன்று
காற்றில் கரைந்துபோன
உன் குரலும்
முத்த சத்தமும்
இனி எப்போது ?

தேசம் விட்டு 
மறுதேசம்  இருக்கும் 
என் கண்ணாளா .....

நீ எப்போது 
வீ டு திரும்புவாய் ?

என் . மதியழகன்

பெண்ணாடம்  

Friday, October 7, 2011

யாரை காதலித்ததோ

யாரை காதலித்ததோ
மேகம் _
இன்று இப்படி
கண்ணீர்
விடுகிறது !
மழை.

ஜி.முத்து ,
சத்தான்குளம்

Thursday, October 6, 2011

ஜன்னலில் அவள்

நிலவை
சிறைப்பிடித்து
விட்டார்களோ ?
ஜன்னலில் அவள்
முகம் ....

சாஜிதா
ஆத்தூர்

Monday, October 3, 2011

முக்கியமான பெண் கடவுளரில்

lord shiva
Free Spiritual Photos Religious Pictures Quotes
http://animation-gifs-glitter-graphics.blogspot.com


சரசுவதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரசுவதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரசுவதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப் பட்டுள்ளாள்.




இந்துக்கள், சரசுவதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரசுவதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரசுவதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.



இதயம் உள்ளது

அன்பை சுமக்க இதயம்  உள்ளது
கண்ணீர் வடிக்க   கண்கள் உள்ளது
கடமை முடிக்க கைகள் உள்ளது
என்றும் உன்னை நினைக்க என்
இதயம் உள்ளது

Thursday, September 29, 2011

உணர்ந்து கொள்கிறேன்

தென்றல் வந்து
உன்னிடம்
பேசிவிட்டு திரும்பியதாக
உணர்ந்து கொள்கிறேன் !

உன் காதோரக்குழல்
அசைந்தாடும்
தருணங்களில் .

தென்கரை சி.சங்கர் ,
                        வந்தவாசி

Wednesday, September 28, 2011

நட்பே நீ மட்டும்

உலகிற்கு ஒளி தரும்
சூரியனே உரங்க சென்றுவிட்டது

என் உயிர்க்கு  ஆயில் தரும்
என் நட்பே  நீ மட்டும் ஏன்
விழித்திருக்கிறாய்

Monday, September 26, 2011

இன்று - உண்மையான ?

காதலுக்கு கண்ணில்லை 
அது  அன்று

காதலுக்கு உண்மையான
பெண்ணில்லை
இது இன்று

Saturday, September 24, 2011

எங்கள் கிராமம்

பவுர்ணமி இரவிலும்
இருண்டு கிடக்கிறது ,
எங்கள் கிராமம்!
என்னவள்  ஊரில்  இல்லை!! 

வி. சுரேஷ் பாபு ,
காட்பாடி 

Wednesday, September 21, 2011

"இதயத்தில்" இடம் கொடு

உன் மேல் யாராவது அன்பாக
இருந்தால்
"இதயத்தில்" இடம் கொடு !

உன்  மீது  மட்டும் 
பிரியமாக  இருந்தால் 
"இதயத்தை "   யே கொடு !

உண்மையான வரி

அவள் அழகை  ரசிக்க  
என்னிடம்
அழகு இல்லை

என் இதயத்தை நேசிக்க
அவளிடம்
இதயம் இல்லை



கடமையை செய்

காதல் செய் கவிதை  வரும்
காதல் செய்  கவலை வரும்
காதல் செய்  கண்ணிர் வரும்

கடமையை  செய்  காதல்
உன் பின்னால்  வரும் .

ஒரு நொடிகள்

உன்னை நினைக்க ஒரு
நொடிகள் போதும் 

உன்னை மறக்க பல நொடிகள் 
ஆகும் 

ஒரு நாள் அந்த  நதியே
வற்றி போனாலும் 

ஒரு நாளும் 
நம் நட்பு  வற்றாது .

Tuesday, September 20, 2011

இல்லை என்று சொல்லிவிடாதே

சிறகு இன்றி பறந்துவந்த
என்னை

காதல் என்ற கூட்டில்
மாட்டி  கொண்டேன் 

 சிறகு உடைந்த பறவையை
 போல் ஆனேன் .

உன் நினைவை சுமந்த நான்
சுவரேயில்லா சித்திரம்  வரைந்தேன்

உன் இதயத்தில்  இடம் தருவாயா
என்று ஏங்கிணேன் 

இல்லை என்று சொல்லிவிடாதே  
தாங்காது என் இதயம் 

உன் சுமையை  மட்டும்  தாங்கும்    
    என் இதயம்

உன் பிரிவை  தாங்காது
  என் இதயம்


Wednesday, September 7, 2011

அவள் நினைவுகள் .

தூக்கத்தில் அவள் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்.

ஆனால் அவள்  இல்லை
பின்புதான் தெரிந்தது .

என் இதயத்தில் துடிக்கும்
அவள் நினைவுகள் .


 

உன் தோழி

நீ மறக்க நினைத்தாலும்
உனக்குள் இருக்கும்
என் நினைவுகள் மறையாது.

ஒரு முறை
என் பெயரை உச்சரித்து பார்
உனக்குள் நான்.

Tuesday, August 30, 2011

முதல்வன் விநாயகர் பிறந்தநாள்

  விநாயகர்  சதுர்த்தி
             01 - 09 -2011


பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
-ஒரு விளக்கம்


அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல. பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தொ¢ந்திருக்கும். அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.

பெரும்பாலான உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும் ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை நீங்கள் பார்த்து, கேட்டு இருக்கலாம். அதைத்தான், அதாவது பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், 'பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது' என்பார்கள். அதற்கு 'மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது' என்று பொருள்.


அனைத்தும் மிக நன்றாக நடந்தது என்ற உயர்வான கருத்தில் அமைந்த இந்தப் பழமொழியை தொடங்கிய பின் ஏதோ நினைத்து ஏதோவாக முடிந்ததைக் குறிப்பிட தற்காலத்தில் பலர் அறியாமையால் பயன்படுத்துகின்றனர்.

- தேஜஸானந்தா
 
தமிழ் யூத் எஸ் எம் எஸ்
                                                      வாழ்த்துக்கள் 

Monday, August 29, 2011

தமிழ் ரமலான் வாழ்த்துகள்

தமிழ் ரமலான்  வாழ்த்துகள்
                                   31-08 - 2011  
இஸ்லாம் போற்றும் கருணை

புனித கிரந்தம் ஹதீஸ் கூறுகிறது :
தமிழ் யூத் எஸ் - எம் - எஸ்                
                                   வாழ்த்துகள்


              

நீ எல்லா உயிர்களிடமும் அன்போடு இரு! ஏனெனில் கடவுள் உனக்கு அன்புகாட்டுகிறார்.


குரானில் கூறப்பட்டுள்ளது
உயிர்களைக் கொல்லுதலும் பண்ணைகளை அழித்தலும் உலகுக்கு போ¢டரைத்தரும்; கடவுளும் அவற்றை ஏற்க மாட்டார்!



குரான் 32.22 ல் கூறப்பட்டுள்ளது:
பகவானிடம் மாமிசம் செல்லுவதில்லை! ரத்தமும் செல்லுவதில்லை! ஆனால், அவா¢டம் சேர்வது அவர் ஆணையை ஏற்று நடக்கும் மனிதர் மனம் மட்டுமே!

'ஹதீஸ்' கூறுகிறது :
அது கடுமையான கோடைக்காலம் ஒரு நாய் நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு தாகத்தால் நீருக்காக அலைந்து கொண்டிருந்தது. ஒரு வேசி அதன் இரங்கத்தக்க நிலையைப் பார்த்தாள். அதனை குளிப்பாட்டி துடைத்து அதன் தாகத்தை தீர்த்தாள். அந்த புண்ணியத்தால் ஈஸ்வரன் அவன் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டார்.

மற்றொரு நிகழ்ச்சி :
ஒரு பெண் பூனையை கட்டிப்போட்டு உணவோ தண்ணீரோ கொடுக்கவில்லை. தானே தேடிக்கொள்ளவும் அதனை அவிழ்த்துவிடவில்லை. அதனால் அவள் மீது ஈஸ்வரன் பெரும்கோபம் கொண்டார். (ஹதீஸ்-ஸஹீஹ- முஸ்லிம்)


Sunday, August 28, 2011

நன்றிக் - கடன்

பத்து மாதம்
கருவறை ...
வளரும் வரை
அரைவணைப்பு...
வாழ்க்கை 
கற்கும் வரை
அர்ப்பணிப்பு....
இனிய
வாழ்க்கைத்துணை
தேடிச் சேர்த்து  வைத்தல் ... 
இதற்கு நன்றிக்கடன் 
செலுத்துகிறார்கள்  பிள்ளைகள்_
பெற்றோருக்கு....
முதியோர்  இல்லத்திற்கு  
வழிகாட்டி ... ! 

       வி . தமிழ்ச்செல்வி ,
       பெரியகுளம்         

Friday, August 12, 2011

சந்தானம் கவிதை -14

பெண்ணே :-
  உன் விழிகளில்  வரும் 
கண்ணீர்  துளிகள்   

உன் இதழ்களில்  மேல் சிந்தும்போது
என் மனம்  கலங்கவில்லை

ஏன் என்றால் 
 அது சிவந்த ரோஜாவின்   
இதழ்களின்  மேல்

பனி துளி சிந்தியதுபோல்
அழகாக இருந்தது . 

               

Wednesday, August 10, 2011

ரோஜா இதழ்கள்

உன்  இதழ்களைப் பார்த்து
தோற்றுப் போனது
சோகத்தில் தான்
உதிர்கிறதோ
ரோஜா  இதழ்கள் !

அமல்ராஜ் டோமினிக்
பொட்டுவாசாவடி 

என் உதடுகள்

மருதாணி
தடவாமலே
சிவந்து விடுகிறது
என் உதடுகள் ........!
உன் பெயரை
உச்சரிக்கிறேனே !!

   தென்கரை சி. சங்கர் ,
   வந்தவாசி

Tuesday, August 2, 2011

கனவில்+நான்+உன்னோடு

கனவு இல்லையெ ன்றால்
நான் எப்போதோ
இறந்திருப்பேன்

நான் உன்னோடு
வாழ்வதெல்லாம்
கனவுகளில் தானே !

வாணிராஜன்
சென்னை - 117


Monday, August 1, 2011

உன்னை நினைவுகளை

மார்கழி மாதத்து நிலவினிலே
பனி கொட்டும் இரவினிலே
விதியிலே புள்ளிவைத்து
கோலம்யிட்டால்   

அன்று முதல்

என் மனதில்
உன்னை  நினைவுகளை
வண்ணமிட்டே ன்  !

Thursday, June 30, 2011

மழை

நம்ப முடியவில்லை
நிலவிலிருந்து  மழையா .... ?

ஆம் 
என்னவளின் முகத்தில் 
கண்ணீர் !

ஆர். கார்மேகம் ,    ஜெயங்கொண்டநிலை .  

Monday, June 27, 2011

அவள் உதடு .....

அளவுக்கு மிஞ்சினாலும் 
அமிர்தமாய் இனிக்கிறது 
அவள்  உதடு ..... 

சதக்கத்துல்ல ,  மாதவரம் . 

Saturday, June 25, 2011

சந்தானம் கவிதை - 12

உன் தரிசனம்

தேவியின் தரிசனம் காண
கோவிலுக்கு சென்றேன் ...

அங்கே 

பெண்ணே  உன் 
   தரிசனம்  கண்டேன்

Friday, June 24, 2011

நீ அழகு ரோஜா

கற்பனைக்கு கருப்பு ரோஜா
சிந்தனைக்கு சிகப்பு   ரோஜா
உனக்கு நான் அன்பு ரோஜா
எனக்கு நீ அழகு ரோஜா

Thursday, June 23, 2011

புரியவில்லை

கண்ணே !
நீ சுத்த
சைவமென்றாய்....

பின்பு ஏன்
என் உதட்டைக்
கடித்தாய்...? 

உதயை. மு . அழகிரிசாமி,    
திருத்துறைப்பூண்டி                      

நம் காதல் யாரிடமும்

என்னை விட்டுக்
கொடுத்துப் பேசாத நீ 
யாருக்காகவும் 
என்னை  விட்டுக்
கொடுக்க மாட்டாயென்கிற
நம்பிக்கையிலேயே 
நீள்கிறது
நம் காதல் ...!

சிவபாரதி , 
சிதம்பரம்

முடிவே இல்லாத பதை

முடிவே
இல்லாத
பதையில்
பயணம் செய்கிறேன்
முடிவில் நீ  இருப்பாய்
என்று நம்பிக்கையில் 

ஜி .அருண் ,  சே. கூடலூர்

Tuesday, June 21, 2011

கல்லூரி மாணவர் - ஜோக்

" கட்சி  மாநாட்டுக்கு
கல்லூரி  மாணவர்களைக் 
கூட்டி வந்தது 
தப்பாப் போச்சு 
தலைவரே ...."  

" என்ன ஆச்சு ?"

" அவங்களுக்கு,
பிரியாணி  பொட்டலம்
வேண்டாமாம்....
பிட்சாவும், பர்கரும் 
கேக்கறாங்க   !"     

வீடுகளில் மீன்தோட்டி வைப்பது நல்லதா ?

வீடுகளில் மீன்தோட்டி  வைப்பது நல்லதா ?




வீடுகளில் மீன்தோட்டி  வைப்பது நன்மையே தரும் .
இதனால்,வாஸ்து   ரீதியாக ஏற்படும்  தோஷங்கள்
  நிவர்த்தியாகிறது .


வீட்டிர்கு  வடக்கு சுவர்கள் , கிழக்கு சுவர்களை ஒட்டி
 மீன்தோட்டி வைக்கலாம் .
சிவப்பு , பச்சை, மஞ்சள் மீன்கள்    அதிர்ஷ்டத்தைக்
கொடுக்கிறது .

மீன்களை  ஒற்றைப் படை எண்ணிக்கையில் 
வைக்க  வேண்டும் .
அதிகமாக இனப்பெருக்கம்  செயும்  மீன்களை
தவிர்க்க வேண்டும் .

Monday, June 20, 2011

முள்ளும் மலரும்

என் மீதுள்ள
கோபத்தால் நீ பூக்களையும்
வெறுக்கிறாய் !

உன் மீதுள்ள
காதலால் நான் முள்ளையும்
ரசிக்கிறேன் !

கே . தன்ராஜ்
கும்மிடிப்பூண்டி.    

Friday, June 17, 2011

இதயம் இடமாற்றம்

அன்பே
இடமாற்றம் 
தவிர்க்க 
முடியாது  என்றாய் .. !

அப்போதாவது 

நீ 
இதயத்தை 
இடமாற்றம்  
செய்கிறேன்
என்று 
சொல்லியிருக்கலாமே!

ஆர் . கே. லிங்கேசன்   ,
மேலகிருஷ்ணன்புதூர்.            

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends