தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

ஆண்மிகம்

எந்த நிலையிலும் இறைவனை நம்பு!


திருமாலும், லட்சுமியும் ஆதிசேஷனின் மீதுஅமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். கலியுகத்தில் மனிதன் எப்படியிருப்பான் என்பது பற்றிய பேச்சு அது. திடீரென திருமால் எழுந்தார். கருடன் கணப்பொழுதில் அவர் முன் வந்து நின்று, "சுவாமி ஏறுங்கள்' என்றான். அவர் எங்கு போகிறார் எனத்தெரியாவிட்டாலும், தன் மேல் அவர் ஏறியதும், அதுபற்றிய விபரம் கேட்டு, அங்கே வேகமாகப் போய் நிற்பது கருடனின் வழக்கம். பெருமாளும் கருடன் மேல் ஏறி, ""அதோ! வண்ணத்துணிகள் காய வைக்கப்பட்டுள்ள அந்த ஆற்றங்கரைக்குப் போ,'' என்றார். கருடன் அதை நோக்கிப் பறக்கவும், ""வேண்டாம்... வைகுண்டத்துக்கே திரும்பி விடு,'' என்றார்.

கருடனும் வைகுண்டத்தில் அவரை இறக்கி விட்டான். அவரைப் பார்த்த லட்சுமி,""சுவாமி! பேச்சைக் கூட பாதியில் விட்டு விட்டு, என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாகக் கிளம்பினீர்கள்! இப்போது, திரும்பி விட்டீர்களே!'' என்றாள்.

திருமால் சிரித்தபடியே, ""லட்சுமி! ஒரு இளைஞன் என் திருநாமத்தை உச்சரித்தபடியே ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றான். கவனக்குறைவாக, வழியில் சலவைத் தொழிலாளி ஒருவன் காயப்போடப் பட்டிருந்த ஒரு சேலையை மிதித்து விட்டான். அதைப் பார்த்த தொழிலாளி ஆத்திரத்தில் அவனை விரட்டினான். நான் அவனைக் காப்பாற்ற புறப்பட்டேன். ஓடிய இளைஞன், என் திருநாமம் சொல்வதை விட்டு விட்டு வழியில் கிடந்த கல்லை எடுத்து, சலவைத்தொழிலாளி மீது எறிவதற்கு ஓங்கினான். "ஆகா! இனி என் உதவி அவனுக்கு தேவையில்லை' என திரும்பி விட்டேன்,'' என்றார். எந்த நிலையிலும் இறைசிந்தனையுடன் இருப்பவனையே இறைவனுக்குப் பிடிக்கும்.


பணப்பிரச்னைகளைத் தீர்க்கும் குபேரலிங்க வழிபாடு


உங்களது தொழிலில் வெளியில் நிலுவையில் நிற்கும் பணம் அதிகமாக இருக்கின்றதா?

அல்லது

சேவை சார்ந்த தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு உழைத்தும் திட்டமிட்டபடி மாத வருமானம் அல்லது லாபத்தை ஈட்ட முடியவில்லையா?

அல்லது

குடும்பப்பிரச்னையால் உங்களுக்கு வர வேண்டிய பங்குச் சொத்து சிறிதும் கிடைக்காமலிருக்கின்றதா?

அல்லது

நேர்மையாக உழைத்தும் பணம் சேமிக்க முடியவில்லையா?

இவை அனைத்திற்கும் தீர்வாக ஒரு ஆன்மீகப்பெரியவர் சொன்ன ஆலோசனையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

ஒவ்வொரு பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்களில் திரு அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் குபேரலிங்கத்திற்கு அபிஷேகத்துக்குத் தேவையான பால்,பூக்கள்,நல்லெண்ணெய் தானமாகத் தரவேண்டும்.தந்து,உரியவர் அல்லது உரியவரது ரத்த உறவுகள் கலந்து கொள்ள வேண்டும்.இப்படி 24 நாட்கள்(வளர்பிறைப்பிரதோஷம்,பவுர்ணமி,தேய்பிறைப்பிரதோஷம்) தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலமாக,வர வேண்டிய பணம்,கிடைக்க வேண்டிய நியாயமான சொத்து,உழைத்துக் கிடைக்க வேண்டிய லாபம் முழுமையாக வந்து சேரும்.

ஆனால்,ஆரம்பிக்கும் நாள் கண்டிப்பாக வளர்பிறை பிரதோஷமாக இருக்க வேண்டும்.

இந்த 24 நாட்களில் தொடர்ந்து குபேரலிங்கத்துக்கு வருகை தந்து இவ்வாறு வழிபாடு செய்யும் போது,எதிர்பாராத தடை(பெரியவர்களின் மரணம் முதலானவை) வந்தால் உரிய இடைவேளை விட்டும் செய்யலாம்.

உதாரணமாக,18 பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்கள் வரை பால் மற்றும் நல்லெண்ணெய் குபேரலிங்கத்துக்கு தானமளித்துவிட்டு,குபேரலிங்க சன்னதியில் நடக்கும் பிரதோஷ பூஜை மற்றும் பவுர்ணமி பூஜைகளில் கலந்து கொண்டு வந்திருப்போம்;19 வது நாளுக்குரிய குபேரலிங்க பூஜையில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டால்,ஒரு மாதம் அல்லது அவரவரின் ஜாதி வழக்கப்படி இடைவெளிவிட்டு மீதி 6 நாட்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

குபேரலிங்கத்து பிரதோஷபூஜை மற்றும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ளும்போது,குபேர பகவானின் காயத்ரி மந்திரம் மற்றும் மூல மந்திரங்களை மனதில் ஜபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.கலந்து கொள்பவர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;முடிந்தால் மஞ்சள் பட்டாடையை அணிந்திருப்பது சிறப்பு.

ஓம்சிவசிவஓம்




THINK FOR YOUR LIFE


Vittu Kodu..!
Viruppam Niraiverum.
                    ABDUL KALAM .

“Mannippu kodu...!
Thavaru kuraiyum.
                      MAHATHMA

“ Manam Vittupesu...!
Anbu Perugum.
                   ANNAI THERASA

Vivekanander
  Santhosamaga Vaala
Muyarchi Seiyathey….!
Nimmathiyaga Vaala
Muyarchi Sei….
Un VaalkaiN Muluvathum
Santhosamaga
Irukum….!

யார் யார் ?

பிறந்தவனை யார் கொல்கிறார்கள் ?
யார் காப்பாற்றுகிறார்கள் ?
ஜீவாத்மாதான் இந்த இரண்டையும் செய்கிறது !
பரமாத்மா தூண்டி விடுகிறது !

மகாவிஷ்ணு புராணம்

------------------------------------------------------------------------
கொடிய பாவி


வட்டிக்கு மேல் வட்டி வாங்கி
வாங்கி அடுத்தவன் சொத்தை
அபகரித்துக் கொண்டவன்
கொடிய பாவி !
                                           வள்ளலார்

---------------------------------------------------------------------------
யாருடன் உண்ண


ந ல் ல வ ர் க ள் ,
நல்லவர்களோடு அமர்ந்த உண்ண வேண்டும் !
மற்றவர்கள் யாருடனும்
உண்டு விட்டுப் போகட்டும்
                                                           நீதி மொழி

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends